Sunday, July 11, 2010

சாலையில் சமத்துவத்தை போதிக்காத முஹம்மது

முஹம்மதுவின் வழி:  சாலையில் சமத்துவத்தை போதிக்காத முஹம்மது 

சஹீ முஸ்லிம் ஹதீஸ்: புத்தகம் 26: எண் 5389

அல்லாஹ்வின் தூதர் (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) கூறியதாக அபூ ஹுரைரா அறிவித்ததாவது: "யூதர்களும் கிறிஸ்தவர்களும் உங்களுக்கு முதலாவது வணக்கத்தைக் (சலாம்)  கூறும்வரையிலும் அவர்களுக்கு நீங்கள் வணக்கம் (சலாம்)  கூறாதீர்கள். அவர்களில் ஒருவரை நீங்கள் வழியில் சந்திக்கும்போது,  சாலையின் இடுக்கமான வழியில் அவர்கள் செல்லும்படி செய்யுங்கள்.


Muslim :: Book 26 : Hadith 5389
 
Abu Huraira reported Allah's Messenger (may peace be upon him) as saying: Do not greet the Jews and the Christians before they greet you and when you meet any one of them on the roads force him to go to the narrowest part of it.

கேள்விகள்:

  • ஒரு ஆன்மீக தலைவர் இப்படித்தான் தன் மக்கள் (இஸ்லாமியர்கள்) மாற்று மதத்தவர்களை நடத்தவேண்டும் என்று போதிக்கலாமா?
  • இப்படி சொல்வதின் மூலம், முஹம்மது எதை சாதிக்க முயற்சி எடுக்கிறார்? இதர மக்களோடு ஒற்றுமையுடன் வாழ்வதையா? சகோதரத்துவத்தோடு வாழ்வதையா? அல்லது இஸ்லாமியர்களின் மனதில் மாற்று மதத்தவர்கள் மீது ஒரு வெறுப்புணர்ச்சி எப்போதும் எரிந்துக்கொண்டே இருக்கவேண்டும் என்பதையா?
  • குறைந்தபட்சம் சாலையில் சமத்துவத்தை போதிக்காத முஹம்மது எப்படி உலகமனைத்திற்கும் ஒரு எடுத்துக்காட்டாக(மாதிரியாக) இருக்கிறார் என்று குர்‍ஆன் போதிக்கிறது?
  • ஒரு கிறிஸ்தவனான என்னை சாலையின் நெருக்கமான வழியில் செல்ல கட்டாயப்படுத்தச் சொல்லும் முஹம்மவை எப்படி என் வழி காட்டியாக கருதமுடியும்?
  • மக்களின் மனதில் வெறுப்புணர்ச்சியை  உண்டாக்கும் விதத்தில் ஒரு மத ஸ்தாபகர் பேசுவது சரியா?
  • இதே போல, வேற்று மதத்தவர்களின் ஆன்மீக தலைவர்கள், முஸ்லீம்களை சாலையில் கண்டால் நெருக்கமான வழியில் அவர்கள் செல்லும்படி கட்டாயப்படுத்துங்கள் என்றுச் சொன்னால், அந்த மார்க்கத்தை அமைதி மார்க்கமென்றும், அப்படிச் சொன்னவர், உலக மக்கள் பின்பற்றத்தகுந்த ஒரு மாதிரி என்றும் இஸ்லாமியர்கள் கூறுவார்களா?

முடிவு.. இஸ்லாமியர்களின் கையில்... 

முஹம்மதுவின் சுன்னா - இந்த தளத்தின் நோக்கம் என்ன?

இஸ்லாமியர்கள் குர்‍ஆனையும், முஹம்மதுவின் சொல், மற்றும் செயல்களையும் [சுன்னா] பின்பற்றவேண்டும். உலக மக்கள் பின்பற்றக்கூடிய ஒரு நல்ல மாதிரி "முஹம்மதுவின் வாழ்க்கையில் உள்ளது" என்று குர்‍ஆன் கூறுகின்றது.

அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.  (குர்‍ஆன் 33:21)

முஹம்மது ஒரு முடிவை எடுத்துவிட்டால், அதனை மாற்ற இஸ்லாமியருக்கு உரிமையில்லை.

மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்மான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.  (குர்‍ஆன் 33:36)

முஹம்மது சொல்வதை அப்படியே பின்பற்றவேண்டும், அவர் தடை செய்வதை விட்டுவிடவேண்டும்.

... (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள், இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள், மேலும், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடினமானவன்.  (குர்‍ஆன் 59:7)

முஹம்மதுவையும், அவருக்கு பின்பாக வந்த காலிபாக்களையும் பின்பற்றவேண்டும்.

Those of you who live after me will see great disagreement. You must then follow my Sunnah and that of the Rightly Guided Caliphs [i.e. Abu Bakr, `Umar ibn Al-Khattab, `Uthman ibn `Affan, and `Ali ibn Abi Talib]. Hold to it, and stick fast to it. Avoid novelties [in matters of religion], for every novelty is an innovation, and every innovation is an error. (Abu Dawud)

[தமிழாக்கம்: எனக்கு பின்பாக இருக்கும் நீங்கள் பலவாறு கருத்து வேறுபாடு கொள்வீர்கள். நீங்கள் என் சுன்னாவையும் (நான் சொன்னதும், செய்ததும்), அதே பல எனக்கு பின்பாக வரும் காலிபாக்களின் சுன்னாவையும் (அதாவது, அபூபக்கர், உமர், உத்மான் மற்றும் அலி போன்றவர்களின்) பின்பற்றவேண்டும்.  அவைகளை விட்டு விடாமல் இருங்கள். மத விவகாரங்களில் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள், புதியவைகளை புகுத்தாதீர்கள், அவைகள் தவறுகளாக இருக்கும்.(அபூ தாவுத்)

இஸ்லாமிய நூல்களாகிய குர்‍ஆன், ஹதீஸ்கள், மற்றும் முஹம்மதுவின் வாழ்க்கை சரித்திரத்திலிருந்து மேற்கோள்களை இந்த தளத்தில் முன் வைத்து, உண்மையாகவே, உலக மக்கள் பின் பற்றக்கூடிய அளவிற்கு அவர் ஒரு நல்ல மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்தாரா இல்லையா என்பதை நாம் காண்போம்.

ஒவ்வொரு கட்டுரையிலும், இஸ்லாமிய மூலநூல்களிலிருந்து வசனங்கள், ஹதீஸ்கள் பதிக்கப்படும், அதன் பின்பு சில கேள்விகள் மட்டும் கேட்கப்படும், உண்மை எது என்பதை அறிந்துக்கொள்ளும் வேலை படிக்கும் வாசகருடையது.